களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தம்!

Date:

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி இயந்திரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தேசிய மின்கட்டமைப்புக்கு 150 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் இயந்திரம் ஒன்றே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று (19) மின் உற்பத்தி இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் தடைப்பட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்று இரவு மின் வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...