கம்பஹா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் திட்ட முன்மொழிவும் நிதி அன்பளிப்பும்!

Date:

கம்பஹா வலய தமிழ் மொழி மூலப் பாடசாலை மாணவர்களின் அறிவு,திறன்,மனப்பாங்கு விருத்தியில் பாடசாலைகளுடன் இணைந்து செயற்படுவதற்காக 2019 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி மன்றம் – கம்பஹ என்ற அமைப்பின் ஐந்தாண்டுத் திட்டம்,வருடாந்த அமுலாக்கத் திட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்தும் அங்குரார்ப்பண வைபவம் அண்மையில் திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கம்பஹா,களனி வலய தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.டீ.எம் தௌஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக fine Enterprises உரிமையாளர் அல்-ஹாஜ் இக்ராம் அவர்கள் கலந்துகொண்டதுடன் 500000 ரூபாவை இவ்வமைப்பிற்கு நன்கொடையாக வழங்கினார். மேலும் அவர் தனது உரையில் அவ்வமைப்பின் எதிர்காலத்திட்டத்தினை பாராட்டி அதன் செயற்பாடுகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த ஆண்டுதோறும் தனது நிறுவனத்தின் மூலம் நிதியுதவியளிப்பதாக உறுதியளித்தார்.

கல்வி அபிவிருத்தி மன்றத்தின் திட்ட முன் வைப்பு நிகழ்வில் கம்பஹா கல்வி வலயத்தின் அதிபர்கள்,பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...