சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் அதன் ஒத்திகை நிகழ்வுகளுக்கான போக்குவரத்து திட்டமொன்றை பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளை (29) முதல் பெப்ரவரி 3ம் திகதி வரை தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும்.அதேபோல், தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் பெப்ரவரி 4 ஆம் திகதி காலை 6 மணி முதல் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதன்படி, மேற்படி நேரங்களில் கொழும்பை அண்மித்துள்ள வீதிகளில் அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.