மெசெஞ்சரின் புதிய சேவை-மெட்டா நிறுவனம் அறிவிப்பு!

Date:

பேஸ்புக் சமூக ஊடக தளம் 2004 இல் ஆரம்பிக்கப்பட்டாலும், உலகம் முழுவதும் பரவ நான்கு ஆண்டுகளாகியது.அப்போதுதான் பேஸ்புக்கில் தகவல் பரிமாற்றம் (செட்) சேவையையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், பேஸ்புக் உள்ளே சென்றால்தான் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும் என்பதால் உடனடியாக பிரபலமாகவில்லை.

எனினும், 2009-இல் அறிதிறன் பேசியில் (ஸ்மாா்ட் போன்) இணையத்தைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்றத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் சேவை அனைவரிடம் பிரபலமாகியது.

இதனால் 2014-இல் பேஸ்புக் நிறுவனமே வாட்ஸ்ஆப் நிறுவனத்தை வாங்கியது. தற்போது வாட்ஸ்ஆப் இல்லாத அறிதிறன் பேசி இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.இந் நிலையில், ஃபேஸ்புக்கில் உள்ள சாட் சேவை மெசேஞ்சராக மாற்றம் கண்டு, வாட்ஸ்ஆப்பிற்கு இணையாக புதிய சேவைகள் இணைக்கப்பட்டுள்ளது.

ஆடியோ, வீடியோ தொலைபேசி அழைப்பு வசதிகள் மெசேஞ்சரில் கடந்த ஆண்டு சோ்க்கப்பட்டன.வாட்ஸ்ஆப்பிலுள்ள தானியங்கி தகவல் அழியும் சேவையைப் போல் மெசேஞ்சரிலும் இந்த சேவை இணைக்கப்பட்டது.

இந் நிலையில், நாம் ஒருவருக்கு தானாக அழியும் வகையிலான தகவலை அனுப்பினால் அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட நபா் ‘ஸ்கீரின் ஷாட்’ எடுத்தால், அது அனுப்பியவருக்கு குறுந்தகவலாக (நோட்டிபிகேஷன்) எச்சரித்திடும் புதிய சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவையைப் பெற மெசேஞ்சரில் உள்ள ‘சீக்ரேட் கான்வா்ஷேசன்’ உள்ளே சென்று- ‘டிஸ்அப்பியரிங் மெசேஜஸ்’ என்பதை தோ்வு செய்து விட்டால் போதும். இதன் மூலம் தகவல் பரிமாற்றம் பாதுகாப்பாகவும், அனுப்பிய தகவலில் வெளிப்படைத் தன்மையும் இருக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.

மேலும், வாட்ஸ்ஆப்பில் இருப்பதைப் போல் குறிப்பிட்ட தகவலைத் தோ்வு செய்து பதிலளிக்கும் வசதியும், மற்றவா்கள் பதிலளிப்பதற்காக பதிவு செய்து கொண்டிருப்பதைத் தெரிந்து கொள்ளவும், அனுப்பப்பட்ட தகவலை சேமித்து வைத்து கொள்ளவும், விடியோக்களை அனுப்புவதற்கு முன்பு எடிட் செய்து கொள்ளவும் பல புதிய சேவைகளை ஃபேஸ்புக் மெசெஞ்சா் அறிமுகம் செய்துள்ளது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...