அரச தாதியர் சங்கத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு!

Date:

அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்ட நடவடிக்கைக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டமா அதிபர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னப்பிரிய ஆகியோருக்கு எதிராக இரண்டு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டமா அதிபரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மாவட்ட நீதிமன்றம், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவருக்கு இரண்டு தடை உத்தரவுகளை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெனிசுலா விவகாரம்: அமெரிக்க தலையீட்டுக்கு எதிராக கொழும்பில் இன்று போராட்டம்

வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்து, முன்னணி சோசலிசக் கட்சி இன்று (05)...

வெனிசுலா ஜனாதிபதியை சிறை பிடித்தது ஒரு மோசமான முன்னுதாரணமாகும்:மு.தமிமுன் அன்சாரி

அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மடூரோ...

2026 ஆம் கல்வியாண்டின் முதல் தவணை இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான முதல் தவணையின் முதல் கட்டம் இன்று (05)...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை

கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை தற்போது நாட்டின் தென்கிழக்குப்...