எரிபொருள் நெருக்கடி: விலை திருத்தத்தை கோருகிறது பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

Date:

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், அரசாங்கம் இதுவரையில் அந்த கோரிக்கைக்கும் பதிலளிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

விலை அதிகரிப்பு தொடர்பான பிரேரணை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விலை திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால், எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நட்டத்தை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ‘மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலையை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு பொறிமுறையை அமைச்சகத்திற்கு நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.

மற்ற நாடுகளில், எரிபொருள் விலை நிர்ணயம் வாரந்தோறும் அல்லது தினசரி மதிப்பாய்வு செய்யப்படுகிறது,’ சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், கச்சா இறக்குமதிக்கான ஆறு மாத கால ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலையானது, தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கையின் வாங்கும் சக்தியை சிக்கலாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

லங்கா ஐஓசி கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெற்றோலின் (ஒக்டேன் 95) எரிபொருள் விலையை 3 ரூபாவாலும், பெற்றோல் (ஒக்டேன் 92) லிட்டருக்கு 7 ரூபாவாலும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...