நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டு அமுல்: மின்சார சபை அறிவிப்பு

Date:

நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும் போது நீர் மின் உற்பத்திக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமென அந்த சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 6 மணிநேர தொடர் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ள கெரவலபிடிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை மாலை அளவில் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க கூடியதாக இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்த களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தை நேற்று பிற்பகல் தேசிய கட்டமைப்புடன் இணைத்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

கெரவலபிடிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்று பிற்பகல் செயலிழந்த நிலையில் இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்பிற்கு 270 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டிருந்தது.

அதேபோல், 130 மெகாவோட் மின்சார இழப்பு களனிதிஸ்ஸ மின்சார உற்பத்தி நிலையத்தில் இருந்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில்...

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...