டெல்லி மீரட் அதிவிரைவு சாலையில் ஏரோ பிளேன் உணவகம்!

Date:

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் டெல்லி மீரட் அதிவிரைவு சாலையில் தனியார் நிறுவனமொன்று ஏர் இந்தியா விமானத்தை 100 இருக்கைகள் கொண்ட உணவகமாக மாற்ற உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து விமான நிலைய ஆணையத்திடமிருந்து ஏலத்தில் எடுத்த ஏர் பஸ் ஏ-320 ரக விமானத்தை உணவகமாக மாற்ற திட்டமிட்டுள்ளன.

இந்த திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனத்துக்கு டெல்லி – மீரட் அதிவிரைவு சாலையில் 5 ஹெக்டேர் நிலத்தை 15 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த ஏரோ பிளேன் உணவகம் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த விமானம் அந்த பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, அதன் உள்ளே உணவகம் போல மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...