ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி!

Date:

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்கு சபாநாயகர் அனுமதியளித்துள்ளார்.

குறித்த அறிக்கையை இன்றையதினம் (புதன்கிழமை) சபையில் முன்வைத்து உரையாற்றிய சபாநாயகர் சாட்சியங்களுக்கமைய தயாரிக்கப்பட்ட 88 அத்தியாயங்களுடன் கூடிய அறிக்கையை நாடாளுமன்ற வாசிகசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் சட்டக்கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியப் பதிவுகள் பகிரங்கப்படுத்தப்படாத நிலையில் ஜனாதிபதி செயலகத்தின் சட்ட விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதி ஆணைக்குழுவின் பெறுபேறுகள் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக பரிசீலனைக்காக இது கையளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சட்ட காரணங்களால் சாட்சி பதிவுகள் வெளியிடப்படவில்லை என்பதுடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பெறுபேறுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான கோப்புகள் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...