மூத்த ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்!

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார (71) இன்று காலமானார்.

சிறுநீரகக் கோளாறு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

பத்மகுமார சுமார் மூன்று மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

பத்மகுமார இலங்கையின் ஊடகத் துறையில் மற்றும் பத்திரிகையின் ஒரு முக்கிய நபராக இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான ‘முல் பிடுவ’ மற்றும் ‘லோக சித்தியம’ ஆகியவற்றில் மிகவும் பிரபலமிக்க ஒருவராவார்.

அவர் லக்பிம பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் லேக் ஹவுஸின் முன்னாள் தலைவரும் ஆவார்.

இதேவேளை, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக நேற்றைய தினம் காலமானமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...