மூத்த ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்!

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார (71) இன்று காலமானார்.

சிறுநீரகக் கோளாறு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

பத்மகுமார சுமார் மூன்று மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

பத்மகுமார இலங்கையின் ஊடகத் துறையில் மற்றும் பத்திரிகையின் ஒரு முக்கிய நபராக இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான ‘முல் பிடுவ’ மற்றும் ‘லோக சித்தியம’ ஆகியவற்றில் மிகவும் பிரபலமிக்க ஒருவராவார்.

அவர் லக்பிம பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் லேக் ஹவுஸின் முன்னாள் தலைவரும் ஆவார்.

இதேவேளை, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக நேற்றைய தினம் காலமானமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...