மூத்த ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்!

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார (71) இன்று காலமானார்.

சிறுநீரகக் கோளாறு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

பத்மகுமார சுமார் மூன்று மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

பத்மகுமார இலங்கையின் ஊடகத் துறையில் மற்றும் பத்திரிகையின் ஒரு முக்கிய நபராக இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான ‘முல் பிடுவ’ மற்றும் ‘லோக சித்தியம’ ஆகியவற்றில் மிகவும் பிரபலமிக்க ஒருவராவார்.

அவர் லக்பிம பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் லேக் ஹவுஸின் முன்னாள் தலைவரும் ஆவார்.

இதேவேளை, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக நேற்றைய தினம் காலமானமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...

அஸ்வெசும விபரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய...

கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை...