கல்பிட்டியில் எரிபொருளை வீணடிக்கும் செயலான சைக்கிள் மற்றும் வாகன பேரணி – தொடர்பாக பதிலளித்த நாமல்!

Date:

NEWSNOW |- கொழும்பு – புத்தளம் வீதியில் நேற்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – வாகன பேரணியின் பின்னணியில் தாம் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

“இன்று கல்பிட்டியில் நடைபெற்ற சைக்கிள் – வாகன பேரணிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களால் எந்த உதவியும் செய்யப்படவில்லை. விளையாட்டு அமைச்சுடன் தொடர்பில்லாத தனியார் நிறுவனத்தினால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என விளையாட்டுத்துறை அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியானது, நாட்டின் நிலைமைய கருத்தில் கொள்ளாமல், அபாயகரமான வாகனங்களை ஓட்டியதாகவும், எரிபொருளை வீணடிப்பதாகவும் குற்றம் சுமத்தி பொதுமக்களின் பல எதிர்ப்புகளை எதிர்கொண்டது.

மேலும் இது ஒரு தொண்டு நிறுவனத்தின் நன்கொடையின் ஒரு பகுதியாக இந்த பேரணியை ஏற்பாடு செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...