ஐக்கிய நாடுகள் சபையின் 2022ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்கை 127ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
அதேநேரம், பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, உலக மகிழ்ச்சி அறிக்கையில் 149 நாடுகளில் இலங்கை 129ஆவது இடத்தில் இருந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானை மகிழ்ச்சியற்ற நாடாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டுள்ள லெபனான், ஜிம்பாப்வேக்குக் கீழே 146 நாடுகளின் குறியீட்டில் கடைசியிலிருந்து இரண்டாவது இடத்திற்குச் சரிந்தது.
பட்டியலில் 121ஆவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கு கீழேயும் இந்தியா 136ஆவது இடத்தில் உள்ளது.
நேபாளம் 84ஆவது இடத்திலும், வங்கதேசம் 94ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 121ஆவது இடத்திலும் உள்ளன. முதல் 20 இடங்களில் ஆசிய நாடுகள் எதுவும் இல்லை.
உலக மகிழ்ச்சி அறிக்கை, அதன் 10ஆவது ஆண்டில், மக்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பற்றிய சொந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும், பொருளாதார மற்றும் சமூகத் தரவுகளின் அடிப்படையிலும் கணக்கிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.