பிரதமர் மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

Date:

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.

பிரதமரின் இந்த விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள புத்த விகாரைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அந்நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆலோசகர் சுகாஸ் உட்பட கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதி விடுதலை செய், புத்தர் சிலைக்கு அடிக்கல் நாட்டாதே போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டக்கார்கள் ஈடுட்டனர்.

இதேவேளை பிரதமர் யாழ் விஜயத்தில் தென்மராட்சி மட்டு.வில் வண்ணத்தி பாலத்திற்கு அருகில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்க ஏற்பாடாகியுள்ளது.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...