சீதாவாக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார் உதய கம்மன்பில!

Date:

சீதாவாக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார்.

அவர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.

இதன்போது, ‘சீதாவக்க பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக என்னை நியமித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், நிறைவேற்றுப் பதவியான மேற்கண்ட பதவியில் நீடிப்பது பொருத்தமற்றது என அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்ததார் என்ற குற்றச்சாட்டில் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரை ஜனாதிபதி அமைச்சு பதவிகளில் இருந்து அண்மையில் பதவி நீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று தொழிற்சங்க நடவடிக்கை!

பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (17) காலை 8 மணி முதல்...

வடக்கு, கிழக்கு பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற  தாழ் அமுக்க வலயம் தொடர்ந்தும் நிலை...

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும்...