வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.எல். பீரிஸிற்கு மீண்டும் அமைச்சு பதவி!

Date:

வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியுள்ளார்.

அதற்கு பதிலாக, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் பீரிஸை ஜனாதிபதி மீண்டும் நியமித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் கூற்றுப்படி, அமைச்சின் பெயர் வெளிவிவகார அமைச்சு என்பதிலிருந்து வெளிவிவகார அமைச்சு என மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், பேராசிரியர் பீரிஸின் மீள் நியமனம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் பெயருக்கான திருத்தம் 2022 பெப்ரவரி 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் கையொப்பமிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு வெளிநாட்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அவர் மீண்டும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு!

பங்களாதேஷ் வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக்...

கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள்...

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்...

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து: உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட 42 இந்திய யாத்ரீகர்கள் பலி.

சவூதி அரேபியாவில் டீசல் டேங்கர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் ...