வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.எல். பீரிஸிற்கு மீண்டும் அமைச்சு பதவி!

Date:

வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியுள்ளார்.

அதற்கு பதிலாக, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் பீரிஸை ஜனாதிபதி மீண்டும் நியமித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் கூற்றுப்படி, அமைச்சின் பெயர் வெளிவிவகார அமைச்சு என்பதிலிருந்து வெளிவிவகார அமைச்சு என மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், பேராசிரியர் பீரிஸின் மீள் நியமனம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் பெயருக்கான திருத்தம் 2022 பெப்ரவரி 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் கையொப்பமிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு வெளிநாட்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அவர் மீண்டும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...