இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி, பசிலை சந்தித்தார்!

Date:

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர், இன்றையதினம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு மேலும் மேலும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக ராஜபக்சவிடம் இந்திய உயர்ஸ்தானிகர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து ஜெய்சங்கர் பசில் ராஜபக்ஷவுடன் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல் பீரிஸைச் சந்தித்தார்.

இந்திய அரசாங்கம் 1 பில்லியன் டொலர் கடனையும், எரிபொருளை இறக்குமதி செய்ய 500 மில்லியன் டொலர் கடனையும் வழங்கியதைத் தொடர்ந்து ஜெய்சங்கரின் வருகை இதுவாகும்.

சீராக முன்னேறி வரும் இந்திய-இலங்கை பாதுகாப்பு உறவுகளும் ஜெய்சங்கரின் வருகை அதிக கவனம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கையின் பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ள வேளையில் இந்தியாவிற்கு கடன்களை வழங்குவதற்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை – பாலஸ்தீனம் இடையிலான நட்புறுதியை மேலும் வலுப்படுத்த இருநாடுகள் உறுதி!

இலங்கை மற்றும் பாலஸ்தீனம் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும்...

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் செப்டம்பர் 24, 25 இல்!

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புகள் (திருத்த) சட்டமூலம்...

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

துமிந்த திஸாநாயக்கவுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்...