இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்: சமூக ஊடகத் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு நாமல் வலியுறுத்தல்!

Date:

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் பலர் பதிவிட்டுள்ளனர். எனினும் அரசாங்க தகவல் திணைக்களமோ, குரல்தர வல்ல அதிகாரிகளோ உத்தியோகபூர்வமாக இந்த முடக்கம் குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையை அடுத்து சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

‘சமூக ஊடகங்களைத் தடுப்பதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். ஏPN இன் கிடைக்கும் தன்மை, நான் இப்போது பயன்படுத்துவதைப் போலவே, அத்தகைய தடைகளை முற்றிலும் பயனற்றதாக ஆக்குகிறது.

அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்’ என நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கேள்வி கேட்கும் சமூகத் தடைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘சமூக ஊடகங்களுக்கு முன்னர் இருந்த புரட்சிகள் மற்றும் தற்போதைய சமூக ஊடகத் தடையால் உங்கள் மீதும் உங்கள் அரசாங்கத்தின் மீதும் கோபம் மற்றும் வெறுப்பு அலைகளைத் தடுக்க எதுவும் செய்யாது. பேச்சு சுதந்திரத்தால் அச்சுறுத்தப்பட்டால், நீங்கள் தலைமை தாங்க தகுதியற்றவர்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...