நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள்: ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!

Date:

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்
தீப் பந்தம் ஏந்தியவாறு பல்கலைக்கழக பிரதான வீதியில் சற்று முன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும், இன்று (3) நாடு முழுவதும் பல பொதுப் போராட்டங்கள் காணப்பட்டன.

பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

எவ்வாறாயினும், எம்பிக்கள் சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை, ஏனெனில் அவர்கள் பாதுகாப்புப் படையினரால் தடுக்கப்பட்டனர்.

மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) இன்று மஹரகமவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது, பின்னர் பொலிஸாரால் இடையூறு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல முக்கிய ஜேவிபி மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்திற்கு எதிராக பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர்.

இதற்கிடையில், நாட்டின் பல பகுதிகளில் சிறிய சிவில் போராட்டங்களும் காணப்பட்டன. சிறிய குழுக்களாக பொது மக்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறும், பதாகைகளை ஏந்தியவாறும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு காணப்பட்டனர்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...