கொழும்பில் மக்கள் போராட்டத்தில் இணைந்தார் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை !

Date:

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இணைந்து கொண்டுள்ளார்.

இந்த போராட்டத்தின் போது, மெல்கம் கர்தினால் ரஞ்சித் பல பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்துள்ளனர்.

இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளையும் இலங்கையின் தேசியக் கொடியையும் ஏந்தியவாறு காணப்பட்டனர்.

தற்போதைய நெருக்கடி நிலையில், நாடு முழுவதும் மக்கள் திரண்டு போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என்று பொது மக்கள் பல பிரதேசங்களில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளையும் தேசியக் கொடியையும் ஏந்தி ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள்...

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்

இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு,...