அநுர குமார திசாநாயக்க வன்முறைப் போராட்டங்களைத் தூண்டுகிறார்: பாராளுமன்றில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Date:

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வன்முறைப் போராட்டங்களைத் தூண்டுவதாகக் கூறி அவர் மீது பாராளுமன்றத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் அவர் மீது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், பாராளுமன்றத்தில் கடும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டது.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இருந்து வரும் வழியில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அனுரகுமார திஸாநாயக்க அரட்டை அடிப்பதையும் அவர்களுடன் உணர்வுகளை எதிரொலிப்பதையும் காணமுடிந்ததாக அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர்.

அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிடுகையில்,

‘எவருக்கும் எதிராக வன்முறை மற்றும் நாசவேலைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கு போராட்டக்காரர்களைத் தூண்டுவது ஜே.வி.பி தலைவருக்கு பொருத்தமற்றது என்று கூறினார்.

மேலும் 1988/ 1989 காலப்பகுதியில் ஜேவிபி தலைவர்கள் இதேபோன்ற கொலைக் கலாச்சாரத்தை தூண்டியதாக அவர் குற்றம்சாட்டினர்.

‘இன்று, நீங்கள் போராட்டக்காரர்களுடனான உரையாடலில் உங்கள் முகத்தை காண்பித்ததால், நீங்கள் தலைமறைவாக உள்ளீர்கள்’ என்றும் ஜோன்ஸடன் பெர்னாண்டோ சபையில் ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...