அநுர குமார திசாநாயக்க வன்முறைப் போராட்டங்களைத் தூண்டுகிறார்: பாராளுமன்றில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Date:

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வன்முறைப் போராட்டங்களைத் தூண்டுவதாகக் கூறி அவர் மீது பாராளுமன்றத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் அவர் மீது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், பாராளுமன்றத்தில் கடும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டது.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இருந்து வரும் வழியில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அனுரகுமார திஸாநாயக்க அரட்டை அடிப்பதையும் அவர்களுடன் உணர்வுகளை எதிரொலிப்பதையும் காணமுடிந்ததாக அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர்.

அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிடுகையில்,

‘எவருக்கும் எதிராக வன்முறை மற்றும் நாசவேலைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கு போராட்டக்காரர்களைத் தூண்டுவது ஜே.வி.பி தலைவருக்கு பொருத்தமற்றது என்று கூறினார்.

மேலும் 1988/ 1989 காலப்பகுதியில் ஜேவிபி தலைவர்கள் இதேபோன்ற கொலைக் கலாச்சாரத்தை தூண்டியதாக அவர் குற்றம்சாட்டினர்.

‘இன்று, நீங்கள் போராட்டக்காரர்களுடனான உரையாடலில் உங்கள் முகத்தை காண்பித்ததால், நீங்கள் தலைமறைவாக உள்ளீர்கள்’ என்றும் ஜோன்ஸடன் பெர்னாண்டோ சபையில் ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...