பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் தொடர்ந்தும் பிரதி சபாநாயகராக செயற்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட அமர்விலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, தனது இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்க மறுத்து விட்டதாகவும், இந்த முக்கியமான நேரத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில், தன்னை பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார்.

இந்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை தான் பதவியில் நீடிப்பதாகவும், பிரதி சபாநாயகர் பதவிக்கான எந்த சலுகைகளையும் பெறமாட்டேன் என்ற நிபந்தனையின் பேரில் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கும் அரசாங்கத்தின் சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்வதற்கும் எடுத்த தீர்மானத்தை அடுத்து ஏப்ரல் 5 ஆம் திகதி ஜனாதிபதியிடம் தனது இராஜினாமாவை கையளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...