போராட்டக்காரர்கள் மோதலால் சிலாபத்தில் பதற்றமான சூழல்!

Date:

சிலாபத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஒரு குழுவிற்கும் அரசாங்கத்திற்கு எதிரான மற்றுமொரு குழுவிற்கும் இடையில் சிலாபம் நகர பகுதியில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையிலான அரச சார்பு செயற்பாட்டாளர்கள் புத்தளம் நோக்கி பேரணியாகச் சென்ற போது, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மற்றுமொரு குழுவைச் சேர்ந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை எதிர்கொண்டு மோதலில் ஈடுபட்டதையடுத்து பதற்றமான நிலைமை உச்சக்கட்டத்தை எட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதலில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...