இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி இணக்கம்: மகாநாயக்க தேரர்களுக்கு விடுத்த அறிக்கைக்கு பதில்

Date:

இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் சம்மதம் தெரிவித்து மகாநாயக்கர்களுக்கு ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளதாக அஸ்கிரிய மகா நிகாயத்தின் பதிவாளர் மெதகம தம்மாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் புதிய அரசியலமைப்பை நாட்டுக்கு முன்வைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அறிக்கையின் உள்ளடக்கங்களை அரசாங்கம் ஆழமாகப் பரிசீலித்து மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் தெரிவித்தார்.

“நிலையான அர்ப்பணிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் மதிப்புமிக்க பணிக்காக குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறார்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...