எரிவாயு தட்டுப்பாடு இல்லை: சமூக ஊடகங்கள் மூலம் எம்மீது சேறு பூசுவதாக லிட்ரோ நிறுவன தலைவர் குற்றச்சாட்டு!

Date:

சமையல் எரிவாயு விநியோகம் குறைக்கப்படுவதாகக் கூறி லிட்ரோ நிறுவனம் மீது சேறு பூசுவதற்கு மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (29) காலை ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘மக்கள் சேற்றை வீச சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். அதேசமயம் இந்த பதிவுகள் அனைத்தும் போலியானவை. சமையல் எரிவாயு விநியோகத்தை நாங்கள் குறைக்கவில்லை, ஒரு நாளைக்கு 80,000 சிலிண்டர்களை விநியோகிக்கிறோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முக்கியமாக எரிவாயுவை நம்பியிருக்கும் நகரங்கள் மற்றும் தொழில்துறை பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். நாங்கள் அன்றாடம் வெளியிடும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்கவில்லை’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்திற்குள் மேலும் 2 எரிவாயு ஏற்றுமதி கப்பல்கள் இலங்கைக்கு வர உள்ளதாகவும், அந்த சரக்குகள் வந்தவுடன் நிலைமை சீரடைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ‘முன்பு எரிவாயு பற்றாக்குறை இருந்தது, ஆனால் தற்போது பற்றாக்குறை இல்லை. நிலைமை முற்றாகச் சரியாகி பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகும்’என்று அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...