பாராளுமன்ற நுழைவாயில் அருகே பதற்றம்: போராட்டக்காரர்கள் பலவந்தமாக கைது?

Date:

பாராளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பலவந்தமாக பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘தவறு என்ன என்பதை தெரிவித்து பின் தம்மை அழைத்துச் செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ள போதும் பெருந்திரளான பொலிஸார் குறித்த இடத்தில் குவிக்கப்பட்டு அனைவரும் பொலிஸ் வண்டிகளில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பேரும் பாராளுமன்ற நுழைவு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

போராட்டக்காரர்கள் ஏற்றப்பட்ட பொலிஸ் பேருந்தின் உள்ளே இருந்து பேஸ்புக் நேரடி வீடியோ (live)படி, போராட்டக்காரர்களை பொலிஸ் வலுக்கட்டாயமாக கைது செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நேரடி வீடியோ காட்சிகளின் போது, போராட்டக்காரர்களை அழைத்துச் செல்ல உத்தரவிட்ட அதிகாரியை சுட்டிக்காட்டுவதையும் காட்டுகின்றன.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்கு இடையூறு விளைவிப்பதாலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையூறாக இருப்பதாலும் சட்டத்தை மீறுவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான நுழைவாயில் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக அவர்கள் திரண்டிருந்தனர்.

பொதுச் சொத்துக்களுக்கு இடையூறாக இருக்க முடியாது என்பதால் இது சட்டத்திற்கு முரணானது என்றும், இதன் காரணமாக அவர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட போதிலும், அந்த நபர்கள் கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்டதால், அவர்களை பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்ல வேண்டியிருந்தது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...