‘அனுரகுமாரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ :பிரதமர் அலுவலகம்

Date:

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யோஷித ராஜபக்ஷவை பொய்யான தகவல்களால் அவமதித்த குற்றத்திற்காக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி (மே3) ஸ்ரீலங்கா அறக்கட்டளை நிறுவனத்தில் ஜே.வி.பி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்ட சில உறுதிப்பத்திர எண்கள் மற்றும் காணிகளின் பெயர்களை முன்வைத்து யோஷித ராஜபக்ஷவை அவமதிக்கும் வகையில் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் பிரதமர் அலுவலகம் குறித்த அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று (3) இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்பான 100 க்கும் மேற்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சுமார் 31 சொத்துக்களின் பட்டியலை அநுர குமார திஸாநாயக்க வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...