‘ஒரு எண்ணெய் கப்பலைக் கூட கொள்வனவு செய்ய முடியவில்லை’: சபையில் ஹர்ஷ

Date:

நாட்டில் எஞ்சியுள்ள வெளிநாட்டு கையிருப்பில் இருந்து ஒரு எண்ணெய் கப்பலைக் கூட கொள்வனவு செய்ய முடியாது என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

தற்போது 50 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும், நாடு திவாலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி உணவுப் பணவீக்கம் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சுகாதாரத்துறையை நடத்துவதற்கு பணம் இல்லை என்றும், அதற்கு பிரதமர் கொஞ்சம் பணம் தருமாறும் ஹர்ஷ கேட்டுக் கொண்டார்.

தரவுகளை மறைப்பது எமது மோசடியாகும் எனவும் அவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் டொலரின் மதிப்பு இதுவரை 100 சதவீதம் குறைந்துள்ளது, நாட்டில் என்ன நடக்கிறது என்பதுதான் கேள்வி
அரசாங்கம் எடுக்கும் இந்த முட்டாள்தனமான முடிவுகளுக்கு யார் பொறுப்பு என்று ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...