பாராளுமன்றம் அருகே போராட்டம் நடத்திய 13 பேரும் பிணையில் விடுதலை!

Date:

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 பேருக்கும் கடுவெல நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நுழைவாயில் வீதியில் அத்துமீறி நடந்து கொண்டமைக்காக குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளித்த பின்னர், பாராளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியவுடன் குழு தமது எதிர்ப்பை ஆரம்பித்தது.

பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் குழுவை கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்திய பின்னர் பிணையில் விடுவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகரகம பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...