ஜனாதிபதி பதவி விலகினால் நாட்டை மீட்க ஒற்றுமையாக செயற்பட தயார்: சபையில் அனுர

Date:

நிதியமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு தேசிய மக்கள் சக்தி ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகாத வரையில் அது பயனற்ற நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதியே பொறுப்பு என்றும் ஜனாதிபதி இன்னும் நாட்டை வழிநடத்தும் போது அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்க தேசிய மக்கள் சக்தி தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பணம் அச்சடித்தல், இரசாயன உரத்துக்கு தடை, மூலப்பொருட்கள் இறக்குமதியை நிறுத்துதல் போன்ற தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுதான் தற்போதைய பொருளாதாரச் சரிவுக்கு காரணம் என்றார்.

மேலும், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் தாங்கள் செய்த தவறை ஏற்றுக்கொண்டு தப்பிக்க முடியாது. இது ஒரு சிறிய தவறு அல்ல. இது ஒரு பாரதூரமான பிரச்சினை’ என்று அவர் கூறினார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...