ஜனாதிபதி பதவி விலகினால் நாட்டை மீட்க ஒற்றுமையாக செயற்பட தயார்: சபையில் அனுர

Date:

நிதியமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு தேசிய மக்கள் சக்தி ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகாத வரையில் அது பயனற்ற நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதியே பொறுப்பு என்றும் ஜனாதிபதி இன்னும் நாட்டை வழிநடத்தும் போது அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்க தேசிய மக்கள் சக்தி தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பணம் அச்சடித்தல், இரசாயன உரத்துக்கு தடை, மூலப்பொருட்கள் இறக்குமதியை நிறுத்துதல் போன்ற தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுதான் தற்போதைய பொருளாதாரச் சரிவுக்கு காரணம் என்றார்.

மேலும், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் தாங்கள் செய்த தவறை ஏற்றுக்கொண்டு தப்பிக்க முடியாது. இது ஒரு சிறிய தவறு அல்ல. இது ஒரு பாரதூரமான பிரச்சினை’ என்று அவர் கூறினார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...