நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு: நீண்ட வரிசையில் மக்கள்

Date:

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் வழங்கப்படுவதில்லை என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால் எரிபொருள் தாங்கிகள் உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவடைந்த போதிலும் தொடர்ந்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பல மைல் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நிற்பதைக்காணக் கூடியதாக உள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நேற்றும் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் அருகே மீண்டும் வரிசைகள் காணப்பட்டன.

இந்திய உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு ‘இந்தியாவின் அர்ப்பணிப்பை வழங்குவதன் மூலம், 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் இன்று கொழும்பை அடைந்தது.

இதன் மூலம் இந்தியாவிலிருந்து சுமார் 440,000 மெட்ரிக் தொன் எரிபொருளைப் பெற்றுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

‘வெசாக் வாரத்தில் ஹஜ்ஜுப் பெருநாள்: உழ்ஹிய்யா கடமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு சமூக நீதிக் கட்சி கோரிக்கை.

அரசியல் இலாபங்களுக்காகவும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஒரு...