பிரதி சபாநாயகர் பதவிக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

Date:

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பரிந்துரைக்கப்பட்டார்.

பின்னர் எதிர்க்கட்சிகளால் இம்தியாஸ் பக்கிர் மாக்கர் பரிந்துரைக்கப்பட்டார். மணி ஒலித்த ஐந்து நிமிடங்களின் பின்னர் வாக்களிப்பு ஆரம்பமாகும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்று (05) அறிவித்தார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரை நிமல் சிறிபால டி சில்வா பரிந்துரைத்ததோடு சுசில் பிரேமஜயந்த பிரேரணையை ஆதரித்தார்.

ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் வேட்புமனுவுக்கு ஆளும் கட்சிக்கு பூரண ஆதரவு இருப்பதாக பீரிஸ் தெரிவித்தார்.

ரஞ்சித் மத்துமபண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை நியமித்ததுடன், எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பிரேரணையை ஆதரித்தார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...