பிரதி சபாநாயகர் பதவிக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

Date:

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பரிந்துரைக்கப்பட்டார்.

பின்னர் எதிர்க்கட்சிகளால் இம்தியாஸ் பக்கிர் மாக்கர் பரிந்துரைக்கப்பட்டார். மணி ஒலித்த ஐந்து நிமிடங்களின் பின்னர் வாக்களிப்பு ஆரம்பமாகும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்று (05) அறிவித்தார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரை நிமல் சிறிபால டி சில்வா பரிந்துரைத்ததோடு சுசில் பிரேமஜயந்த பிரேரணையை ஆதரித்தார்.

ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் வேட்புமனுவுக்கு ஆளும் கட்சிக்கு பூரண ஆதரவு இருப்பதாக பீரிஸ் தெரிவித்தார்.

ரஞ்சித் மத்துமபண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை நியமித்ததுடன், எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பிரேரணையை ஆதரித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...