மக்களின் குரலை புரிந்து கொள்ளாவிட்டால் பாராளுமன்றத்தின் நம்பிக்கை பறிபோகும்:இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர்

Date:

மக்களின் குரலை புரிந்து கொள்ளாவிட்டால் பாராளுமன்றத்தின் நம்பகத்தன்மை இழக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தேர்தலின் பின்னர் பாக்கீர் மாக்கார் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, பிரதி சபாநாயகர் தேர்தலில் எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் இந்த சபை நம் நாட்டு மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தும் மையமாகவும், குறுக்கு வழியாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நம்பகத்தன்மையை தக்கவைக்க முடியாவிட்டால் அது கேள்விக்குறிதான். தற்போதைய ஆட்சிக்கு எதிரான கருத்து இருக்கும்போது இந்த வாக்கைப் பயன்படுத்துவது புரிந்துகொள்ள முடியாதது.

பொதுமக்களின் கருத்தை எதிர்கொள்ளும் வகையில் துணிச்சலை வெளிப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...