மக்களின் குரலை புரிந்து கொள்ளாவிட்டால் பாராளுமன்றத்தின் நம்பிக்கை பறிபோகும்:இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர்

Date:

மக்களின் குரலை புரிந்து கொள்ளாவிட்டால் பாராளுமன்றத்தின் நம்பகத்தன்மை இழக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தேர்தலின் பின்னர் பாக்கீர் மாக்கார் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, பிரதி சபாநாயகர் தேர்தலில் எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் இந்த சபை நம் நாட்டு மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தும் மையமாகவும், குறுக்கு வழியாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நம்பகத்தன்மையை தக்கவைக்க முடியாவிட்டால் அது கேள்விக்குறிதான். தற்போதைய ஆட்சிக்கு எதிரான கருத்து இருக்கும்போது இந்த வாக்கைப் பயன்படுத்துவது புரிந்துகொள்ள முடியாதது.

பொதுமக்களின் கருத்தை எதிர்கொள்ளும் வகையில் துணிச்சலை வெளிப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...