சபாநாயகரின் அலுவலகத்திற்குள் புகுந்த எதிர்க்கட்சியினரால் பாராளுமன்றத்தில் பதற்றம்!

Date:

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் குழு இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் நுழைந்தனர்.

நேற்று மாலையில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தனவிடம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், அரசாங்கத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிப்பதற்கான திகதியை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்தும் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினர்.

அதேவேளை உறுப்பினர்கள் நம்பிக்கையில்ல பிரேரணை மீது விவாதம் செய்வதற்கான திகதியை வழங்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது, ஆனால் பதவி நீக்க பிரேரணைக்கு இல்லை என்றும் கூறினர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...