ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளுக்கும், சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையில் இன்று கலந்துரையாடல்!

Date:

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் கலந்துரையாடலை நடத்தவுள்ளன.

தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள யோசனை என்பன தொடர்பில் இன்று இரு தரப்பினரும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதற்கிடையில் சுயாதீன நாடாளுமன்ற குழுவும் இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இதுதவிர சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கின்றனர்.

Popular

More like this
Related

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட...

ஷானி மற்றும் ரவியின் அடிப்படை உரிமைகளை தேசபந்து மீறியுள்ளதாக தீர்ப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவர் அடிப்படை...

சவூதி-துருக்கி-பாகிஸ்தான் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் : அமெரிக்காவின் முஸ்லிம் நேட்டோவா அல்லது வெறும் காகித புலியா?

-லத்தீப் பாரூக் சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான், ஆகிய நாடுகள்,  2026...

பிலிப்பைன்ஸ்: தசாப்தகால போராட்டத்திற்குப் பின் முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நாடாளுமன்றத் தேர்தல்!

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பாங்சாமோரோ தன்னாட்சிப் பிராந்தியத்தில் (BARMM) வரலாற்றுச் சிறப்புமிக்க...