அலரி மாளிகை அருகே பதற்ற நிலைமை தீவிரம்: காலிமுகத்திடல் நோக்கி விரையும் அரசாங்க ஆதரவாளர்கள்!

Date:

‘மைனா கோ கம’விற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதால் அலரிமாளிகைக்கு அருகில் பதற்றமான சூழல் நிலவியது.

பிரதமருக்கு ஆதரவாக அலரிமாளிகைக்கு அருகில் வந்த ஆதரவாளர்கள், அருகில் உள்ள “மைனா கோ கிராமத்திற்கு” வந்து, அங்கு கட்டப்பட்டிருந்த முகாம்களை தாக்கியதால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் இன்று (09) காலை பிரதமரை சந்தித்த பின்னர் அலரிமாளிகையை வந்தடைந்தனர்.

அங்கு கட்டப்பட்டிருந்த முகாம்களை இடித்து தள்ளினர். அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மாடிகளை இடித்துத் தீயிட்டு எரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை அலரி மாளிகை முன் திரண்ட அரசாங்கத்திற்கு குறிப்பாக மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் பகுதிக்கு செல்ல தயாராகியுள்ளனர்.

இதேவேளை இன்று காலை அலரி மாளிகை பகுதிக்கு காலிமுகத்திடல் போராட்டத்தை சேர்ந்த மூவர் வந்திருந்ததாகவும், அவர்களை அடையாளம் கண்ட அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த மூவரையும் தாக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான சூழ்நிலையில் அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசாங்க ஆதரவாளர்கள் காலிமுகத்திடல் நோக்கி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...