இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கை!

Date:

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் ஆனால் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் திட்டமிட்டபடி நடைபெறுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டவுடன் கொள்கைப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குத் தயாராகும் வகையில் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் திட்டமிட்டபடி இடம்பெறும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இலங்கையில் நிலவும் அமைதியின்மை மற்றும் வன்முறைகள் தொடர்பிலும் அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டுத் தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.

அத்தோடு ‘அதிகரிக்கும் சமூக பதற்றங்கள் மற்றும் வன்முறைகள் குறித்து தாம் அக்கறை கொண்டுள்ளதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான ‘தொழில்நுட்ப மட்ட’ கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன, புதிய இலங்கை அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கை விவாதங்களுக்கு தயாராக இருக்கும் வகையில் தொடரும் என நோசாகி கூறினார்.

Popular

More like this
Related

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

‘வெசாக் வாரத்தில் ஹஜ்ஜுப் பெருநாள்: உழ்ஹிய்யா கடமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு சமூக நீதிக் கட்சி கோரிக்கை.

அரசியல் இலாபங்களுக்காகவும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஒரு...