இனி அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.
ஆங்கில ஊடகடொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பஸ் உரிமையாளர்கள் அலரிமாளிகையில் நடத்தப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு மாத்திரம் பணம் வழங்குவதாகவும் சிலருக்கு தனிப்பட்ட இலாபத்திற்காக மட்டுமே வழங்குவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்காக பஸ்களை வழங்குவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம போராட்டக்களத்தின் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மற்றும் அதில் இருந்தவர்கள் கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 20 இற்க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீ வைத்துள்ளனர்.