நாளை புகையிரத சேவை இயங்கும்!

Date:

ஊரடங்குச் சட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவை நாளை (12) காலை 8.00 மணிக்குப் பின்னர் மீள ஆரம்பிக்கப்படும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நீண்ட தூர ரயில் சேவை வெள்ளிக்கிழமை (13) ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வழமையாக காலை வேளையில் இயங்கும் சில புகையிரதங்கள் மாத்திரம் காலை வேளையில் இயங்காது எனவும் ஜயசுந்தர தெரிவித்தார்.

இதேவேளை இரவு 7.00 மணிக்குப் பின்னர் 1971 என்ற ரயில்வே வாடிக்கையாளர் சேவை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...