சற்று முன்னர் முன்னாள் பிரதமர் ரணில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு!

Date:

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சந்திப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் இருவரின் விவாதத்தின் உள்ளடக்கம் தெரியவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் உதவியாளர் தெரிவித்துள்ளதுடன் ‘இது பாராளுமன்றம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஜனநாயகம் பற்றியது’ கலந்துரையாடலாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே இந்த சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் கலந்துரையாடல் இடம்பெற்றதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர்.

விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ பிரதமர் பதவியை வழங்குவார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் விக்கிரமசிங்க அதனை ஏற்றுக்கொள்வாரா என்பது இன்னும் தெரியவில்லை.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...