சற்று முன்னர் முன்னாள் பிரதமர் ரணில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு!

Date:

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சந்திப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் இருவரின் விவாதத்தின் உள்ளடக்கம் தெரியவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் உதவியாளர் தெரிவித்துள்ளதுடன் ‘இது பாராளுமன்றம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஜனநாயகம் பற்றியது’ கலந்துரையாடலாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே இந்த சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் கலந்துரையாடல் இடம்பெற்றதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர்.

விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ பிரதமர் பதவியை வழங்குவார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் விக்கிரமசிங்க அதனை ஏற்றுக்கொள்வாரா என்பது இன்னும் தெரியவில்லை.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...