சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 பேர் கைது!

Date:

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 பேர் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையில் நேற்றிரவு (18) 7.30 மணியளவில் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 19 பேரும் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும் அடங்குவதாகவும் நாளை 20ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...