எரிபொருளைக் கொண்டு செல்ல பொலிஸ் பாதுகாப்பு தேவை: தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள்

Date:

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி, சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி சாந்த சில்வா எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமூகமளிக்க முடியாது என பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (22) சராசரியாக 3,600 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோலை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமையான நாட்களில், ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகம் நடைபெறாது. எவ்வாறாயினும், இன்றும் எரிபொருள் விநியோகம் தொடர்கிறது, குறிப்பாக 92 ஒக்டேன் பெற்றோலின் விநியோகம் தொடர்கிறது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...