பாடசாலை மாணவர்களுக்கிடையில் இன, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விசேட நிகழ்வு!

Date:

பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் இன, மத நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தவும் விசேட நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது.

புத்தளம் மாவட்டம் ஆனமடுவ தேர்தல் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சங்கட்டிகுளம் சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கிடையில் இந்த விசேட நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வளவாளராக டி.எம்.கயான் புஸ்பகுமார, பிரியன்த தீபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் சர்வ மதத் தலைவர்களான, ரபாவே சுமண ரதன தேரர், எம்.சவேந்திர சர்மா குருக்கள், அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் மௌலவி, அருட்தந்தை ரத்னமலர் ஆகியோர் கலந்துகொண்டு முக்கிய வழிகாட்டல்களையும் கருத்துரைகளையும் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வை தேசிய சமாதான பேரவையின் புத்தளம் மாவட்டக்கிளையின் பொறுப்பாளர் முஸ்னியா நெறிப்படுத்தினார்.

அதேவேளை இனங்களுக்கிடையிலான சகவாழ்வு சம்பந்தமான கருத்துக்களை பதிவு செய்யும் வகையில் நடைமுறை உதாரணங்களோடு இந்த பயற்சி செயலமர்வு நிகழ்வு நடைபெற்றது.

அதுமட்டுமில்லாது சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களிடையே வெசாக் கூடுகள் கட்டியும், மேலும் சில விளையாட்டு பயிற்சிகளையும் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...