‘இந்த மாதம் நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் தகவல் தவறானது’

Date:

விமான சேவை பயன்பாட்டுக்கான எரிபொருள் இறக்குமதி செய்யப்படாததால் எதிர்வரும் மே 31 ஆம் திகதி பிறகு விமான நிலையங்கள் மூடப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என விமான நிலைய கடமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று கருத்த தெரிவித்த அவர் அதிகாரப்பூர்வமாக அனைத்து செய்திகளையும் மறுத்துள்ளார் எனவும் அவை தவறானவை என்று கூறினார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஏற்கனவே சென்னைக்கு திரும்பியுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜெட் ஏ1 எரிபொருள் உண்மையில் இறக்குமதி செய்யப்பட்டது என்றும் மூன்றாம் தரப்பினரும் ஜெட் எரிபொருளை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஆதாரங்கள் வெளிப்படுத்தின.

இதேவேளை இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் காணப்படுவதாகவும் எரிபொருள் நெருக்கடி இலங்கையை உலகத்திலிருந்து விலக்கி வைப்பதாக தெரிவித்து குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...