சட்டவிரோதமாக எரிபொருளை விற்பனை செய்த 137 பேர் கைது!

Date:

நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
429 இடங்களில் இடம்பெற்ற சோதனைகளில் 27,000 லீட்டர் பெட்ரோல், 22,000 லீட்டர் டீசல் மற்றும் 10,000 லீட்டர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்வனவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை சட்டவிரோதமான விற்பனை தொடர்பான முறைப்பாடுகளை 118, 119, அல்லது 1997 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...