அட்டுளுகம பிரதேசத்தில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்பு!

Date:

பண்டாரகம, அட்டுளுகம பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 9 வயது சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தூரத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில் சிறுமி சம்பவத்தை எதிர்கொள்ள நேரிட்டதாக பொலிஸ் குழுக்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அட்டுளுகம பள்ளிவாசலுக்கு முன்பாக வசிக்கும் அல்கஸ்ஸாலி வித்தியாலயத்தைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று (27) காலை 10:00 மணியளவில் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்கு சென்ற சிறுமி காணாமல் போனதாகக் கூறப்பட்டதை அடுத்து, சிறுமியை தேடும் பணியில் நான்கு பொலிஸ் குழுக்களை நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள்...

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்

இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு,...

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...