‘சாகும் வரை கற்க வேண்டும்’ :க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் 74 வயது முதியவர்

Date:

காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேச களுபோவிட்டியனைச் சேர்ந்த 74 வயதான சந்திரதாச கொடகே நேற்று (மே 28) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு சந்திரதாச கொடகே விண்ணப்பித்திருந்ததாகவும், அதன்படி அவர் நேற்று விஞ்ஞான பாடத்திற்கு தோற்றியுள்ளார்.

அதேநேரம், அவர் நாளைய தினம் (மே 30) கணிதப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார்.

கடந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பாடத்திற்கு தோற்றி ‘எஸ்’ (S) சித்தியைப் பெற்றிருந்தார்.

‘எனக்கு இப்போது 74 வயதாகிறது. அலபலதெனிய மகா வித்தியாலயத்தில் படித்தேன் 1970 ஆம் ஆண்டு தான் நான் முதன் முதலில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினேன். அந்தத் தேர்வில் ஏழு பாடங்களில் நான்கு பாடங்களுக்கு சித்தி கிடைத்தன.

ஆனால், அப்போதைய அழுத்தத்தால் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் எனக்கு வேலை கிடைக்கவில்லை.
நான் சுய திருப்திக்காகவும், வேடிக்கைக்காகவும் தேர்வு எழுதுவதாகவும் அவர் இதன்போது கூறினார்.

மேலும், புத்தகங்கள் படிப்பதன் மூலம் அறிவு கிடைக்கிறது. எனக்கு அறிவியல் பாடத்தில் பொது அறிவு உள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த முறை அறிவியல் வினாத்தாள் கடினமாக உள்ளது. பரீட்சைக்கு அமர்வதோடு மட்டும் கற்றலை மட்டுப்படுத்த முடியாது.

சாகும் வரை கற்க வேண்டும். கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் உள்ளன, இப்போது தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாறிவிட்டது, நவீனமயமாக்கப்பட்ட கல்வி முறை உள்ளது.

அன்றைய தினம் போல் அல்லாமல், தற்போது பாடசாலை மாணவர்கள் கல்வி கற்க ஏராளமான வசதிகள் உள்ளன. அப்போது எங்களுக்கு எந்த வசதியும் இல்லை. இப்போது பயிற்சி வகுப்புகள் உள்ளன. ஊடகங்கள் மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது எனவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...