அவிசாவளை , கல்முனை பகுதிகளில் 2 சிறுவர்களை காணவில்லை!

Date:

அவிசாவளை, கொட்டகொடவத்த பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரும் காணாமல் போயுள்ளார்.

தமது பிள்ளை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த மாணவன் கடந்த (28) முதல் காணாமல் போயுள்ளதாக அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பெற்றோர் நேற்று (29) இரவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் முன்பு வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து சில நாட்கள் கழித்து திரும்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கல்முனையில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி, நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பு பாடசாலையில் இருந்து காணாமல் போனதாக புகாராளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த,...

QR கொடுப்பனவை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

புதிய QR முறை கொடுப்பனவுக்கு அப்பாற் சென்ற கலாசார ரீதியிலான பிணைப்பாக...

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு...

அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ்...