மருந்து தட்டுப்பாட்டுக்கு உதவ வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் ஆர்வம்!

Date:

கஹட்டோவிட்ட பகுதியைச் சேர்ந்தவரும் கட்டார் நாட்டில் வசிப்பவருமான பொறியியலாளர் அல் ஹாஜ் மொஹமட் இஃஹாம், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு தேவையான பரிசோதனை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார்.

அவரின் மகனாக மகன் உசைத்தின் பெயரில் இந்த உபகரணங்களை வழங்கி வைத்தார்.

அதற்கமைய 163,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய இரசாயனப் பொருட்களை வைத்தியசாலையில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு சில பரிசோதனைகளின் பாவனைக்காக வழங்கியுள்ளார்.

இந்த இரசாயனங்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவதோடு இந்த உதவியின் நோக்கம், வரவிருக்கும் சில மாதங்களுக்கு மருத்துவமனையில் இரசாயனப் பற்றாக்குறையை எளிதாக்குவதாகும்.

மேலும் 37,000 ரூபா பெறுமதியான மற்றொரு இரசாயணப் பொருட்களும் ஆய்வகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...