அமைச்சரவைப் பொறுப்புகளை ஏற்கும் எம்.பி.க்கள் ஸ்ரீ.ல.சு.க.-வில் இருந்து நீக்கப்படுவார்கள்- மைத்திரி

Date:

அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்படும் என கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தின்படி, எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கப் பதவியை ஏற்றுக்கொண்டால், அவர் சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார் என மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் புகைபிடிக்கும் பழக்கம்!

பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்...

உருவாகிறது புதிய காற்றழுத்தம்: மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.

எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதியளவில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு...

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...