கபிலித்தை பகுதியின் காணிகளை அபகரிப்பு செய்பவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் பணிப்புரை!

Date:

கபிலித்த வனப்பகுதியில் பலவந்தமாக காணிகளை ஆக்கிரமித்துள்ளவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (1) மொனராகலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ,

கபிலித்த வனப்பகுதிக்கு சொந்தமான காணிகளை பயிர்ச்செய்கைக்காக சில குழுக்கள் வலுக்கட்டாயமாக சுவீகரிக்க முயற்சிப்பதாக வன பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் அமைச்சர் இந்த பணிப்புரையை வழங்கினார்.

​​கபிலித்த வனப்பகுதிக்கு வெளியில் 25,000 ஏக்கர் காணி பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்டுள்ள போதிலும், சிலர் பயிர் செய்யாமல் ஒதுக்கப்பட்ட காணிகளை கையகப்படுத்த முயற்சிப்பதாக அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்திருந்தனர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...